சமீப காலமாக நாடு முழுவதும் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் முறையாக பணம் நிரப்பப்படுவது இல்லை. இதே நிலை அதிரையிலும் தொடர்கிறது. இங்கு உள்ள இந்தியன், கனரா, எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளுக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரங்களில் பணம் கிடைப்பது இல்லை. இதனால் அவசர தேவைக்கு தனது சொந்த பணத்தை எடுக்க முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே இந்தியன் வங்கிக்கு சொந்தமான டெபாசிட் இயந்திரத்தில் மட்டும் சிலர் டெபாசிட் செய்யும் பணத்தை பொதுமக்கள் எடுத்து வருகின்றனர்.
பண பரிவர்த்தனைக்கு வங்கியை பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில் வங்கியில் இருக்கும் பணத்தை எடுக்க முடியாமல் பொதுமக்கள் திணறிவருவது குறிப்பிடத்தக்கது.