Friday, April 19, 2024

பட்டுக்கோட்டை தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தாக்குதல் மல்லிப்பட்டிணம் SDPI கிளை கடும் கண்டனம்!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஆம்புலன்ஸ் மற்றும் ஓட்டுனரை தாக்கிய குண்டர்களை உடனடியாக காவல்துறையினர் கைது செய்திட வேண்டும் என்று மல்லிப்பட்டிணம் SDPI கோரிக்கை வைக்கிறது.

கடந்த இருநாட்களுக்கு முன்னர் அதிரை அருகே மஞ்சவயலில் ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்டனர்.அவர்களின் உடலை உடற்கூறாய்வு முடிவடைந்த நிலையில் பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் இருந்த பிரேதத்தை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல காவல்துறையினர் அழைத்ததின் பெயரில் பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்திற்கு சொந்தமான ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.காவல்துறையினர் பாதுகாப்பு வாகனம்

உடலை கொண்டு செல்லும் வழியில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த சமூக விரோத கும்பல் ஆம்புலன்ஸை வழிமறித்து தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தாக்கியுள்ளனர்.காயத்தையும் பொருட்படுத்தாமல் உடலை இறந்தவரின் வீட்டில் சேர்த்து விட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

காவல்துறையினரின் அலட்சிப்போக்கால் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர் தாக்குப்பட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. ஆகவே இதில் ஈடுபட்ட அத்தனை பேரையும் உடனடியாக கைது செய்திட வேண்டும் என்று SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் கிளை கோரிக்கை வைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...