Thursday, March 28, 2024

அதிரையில் இரண்டாவது முறையாக தீ விபத்து !

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடைத்தெரு S.M.A. அன்வர் பந்தல் அமைப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு அடுக்கி வைக்கபட்டிருந்த கீற்றுகள் , மரங்கள் போன்ற பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.

அந்த தீ விபத்து ஏற்பட்டு இரண்டு நாட்களே ஆன நிலையில் அதிரையில் மீண்டும் ஒரு தீ விபத்து நிகழ்ந்துள்ளது. அதிரை செட்டித்தோப்பில் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கடுமையான வெயிலின் காரணமாக வீட்டிற்கு செல்லும் மின் இணைப்பில் அழுத்தம் ஏற்பட்டு அது வீடு முழுவதும் பரவி , ஒரு வீடு முழுவதும் எரிந்தும் மற்றொரு வீடு பாதி எரிந்த நிலையிலும் உள்ளன. அப்பகுதி மக்கள் தீ மேலும் பரவாத வகையில் தீயை அணைத்தனர்.

அதிரையில் சமீப காலமாக இது போன்ற தீ விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. தீ விபத்து ஏற்பட்டால் அத்தீயை அணைக்க பட்டுக்கோட்டை , பேராவூரணி போன்ற ஊர்களில் இருந்தே தீயணைப்பு வாகனங்கள் வருகின்றன. ஆனால் பட்டுக்கோட்டை , பேராவூரணி ஆகிய நகரங்கள் அதிரையில் இருந்து சற்று தொலைவில் இருப்பதால் தீயணைப்பு வாகனம் வருவதற்கு முன்பே தீ விபத்தால் பொருட்சேதம் அதிகளவில் ஏற்பட்டுவிடுகிறது.

எனவே பொருட்சேதத்தை தவிர்க்கவும் , தீ விபத்து ஏற்பட்டால் விரைந்து தீயை அணைக்கவும் அதிரையில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என ஊர்மக்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...