Thursday, March 28, 2024

உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. கைது!!

Share post:

Date:

- Advertisement -

உனாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்திருந்தார். ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுக்காத நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் இல்லம் முன் அந்த பெண் தீக்குளிக்க முயன்றார். இந்த நிலையில், போலீஸாரால் கைது செய்யப்பட்ட அந்த பெண்ணின் தந்தை மர்மமான முறையில் உயிரிழந்தார்.

நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து எம்எல்ஏவின் சகோதரர் அதுல் சிங் செங்காரை போலீசார் கைது செய்தனர். வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் மீது 3 வழக்குகளை பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், நேற்று காலை முதல் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் அறிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...