Thursday, March 28, 2024

மும்பை ஐபில் மைதானத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு..!!!

Share post:

Date:

- Advertisement -

11 ஆவது ஐ.பி.எல் போட்டி நேற்று மும்பையில் கோலாகலமாக தொடங்கி நடந்துகொண்டிருந்தபோது, மைதானத்தில் தமிழர் ஒருவர் BAN STERLITE என்ற பதாகையை உயர்த்திப்பிடித்து, தனது ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பினை பதிவு செய்திருந்தார்.

மும்பை வான்கடே மைதானத்தில் 11 ஆவது ஐ.பி.எல் போட்டி நேற்று ஆரம்பமாகியது. இந்த போட்டி தொடர் மே மாதம் 27 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெறவுள்ளது.

கோலாகலமான கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று ஆரம்பமான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழக அராசியில் தலைவர்களும், பல துறை பிரபலங்களும், சென்னையில் ஐபில்போட்டிகள் நடக்க கூடாது எனவும், நடந்தால் மைதானத்தில் போராட்ட பதாகைகளை உயர்த்திப்பிடித்து, உலகத்தின் பார்வையை தமிழகத்தின் பக்கம் திருப்ப வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய போட்டி நடந்த மும்பை வான்கடே மைதானத்தில் தமிழர் ஒருவர் BAN STERLITE என்ற பதாகையினை உயர்த்திப்பிடித்து, தனது ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பினை பதிவு செய்திருந்தார்.

இந்த ஒரு பதாகை, அடுத்த போட்டிகளில் ஓராயிரம் பதாகைகளாக மாறி விடுமோ என்ற அச்சம் ஐ.பி.எல் நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...