Friday, April 19, 2024

குவைத்தில் சாலை விபத்து: இந்தியர்கள் உள்பட 15 பேர் உடல் நசுங்கி மரணம்!!(video)

Share post:

Date:

- Advertisement -

 

குவைத்: குவைத்தில் நடந்த பயங்கர சாலைவிபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என கூறப்படுகிறது.

இரண்டு பேருந்துகளில் தொழிலாளர்கள் பணிமுடிந்து தங்களது இருப்பிடம் திரும்பி கொண்டிருந்தனர். எதிரெதிர் திசையில் வந்த இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டது.

பர்கான் பீல்டு என்ற இடம் அருகே நெடுஞ்சாலையில் இரு பேருந்துகளும் எதிரெதிர் திசையில் வந்துகொண்டிருந்தன.

அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு பேருந்துகளும் ஒன்றோடு ஒன்று பலமாக மோதி விபத்துக்குள்ளானதில் 15-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானதாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் உடனடி மீட்பு பணியில் இறங்கியுள்ளனர். காயமடைந்தோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கூடும் என அஞ்சப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...