தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் வித்யா.இவருடைய கணவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மாலை கீரனூர் செல்ல பட்டுக்கோட்டையில் பேருந்தில் பயணித்து உள்ளார். வித்யா தன்னுடைய பிள்ளையாகிய தனுஷ் என்ற குழந்தையையும் அழைத்து சென்றுள்ளார்.இந்நிலையில்,இவர் தஞ்சை சென்ற அதன்பின்னர் கீரனூர் வழியாக திருச்சி செல்ல PLA TRANSPORT என்ற தனியார் பேருந்தில் பயணித்து உள்ளார்.
இந்நிலையில் இவர் தன்னுடைய உறவினர்களுக்கு இரவு சரியாக 8மணியளவில் தன்னுடைய பட்டுகோட்டை வீட்டிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.இதனைத்தொடர்ந்து, தொலைபேசியை வித்தியாவின் வீட்டார் ON செய்து பேசியுள்ளனர்.ஆனால்,வித்யா பேச ஆரம்பித்ததும் யாரோ தொலைபேசியை அவர்களிடம் இருந்து புடுங்கி வித்யாவை தாக்கியது போல் சத்தம் கேட்டதாக பலர் தகவல் தெருவிக்கின்றனர்.
இதனையடுத்து, வித்யாவின் தொலைபேசி அதன் பின்னர் துண்டிக்கப்பட்டதாகவும் அவரின் உறவினர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், வித்யா கடத்தப்பட்டாரா என்ற கோணத்தில் அவருடைய உறவினர்கள் காவல் துறையினரிடம் வழக்கு பதிவு செய்தனர்.
ஆனால்,தற்பொழுது வரை அவர்கள் இருவரும் கிடைக்கவில்லை என்றும், எங்கேயும் கிடைத்தால் எங்களை தொடர்புகொள்ளுங்கள் என்றும் அவரின் உறவினர்கள் கேட்டுக்கொண்டனர்.
வித்யா மற்றும் குழந்தையின் அடையாளங்கள்:-
பெயர்:-வித்யா
வயது:-25
ஊர்:-பட்டுகோட்டை
காணாமல் போன அன்று அணிந்து இருந்த ஆடை:- ஆரஞ்சி கலர் புடவை
குழந்தையின் பெயர்:-தனுஷ்
இவர்களை எங்கு கண்டாலும் உடனே தொடர்புகொள்ள வேண்டிய எண்:- 7639832530,6381260769.
ஆகவே,பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும், முடிந்த அளவு வெளியில் ஆண் துணையுடன் செல்லவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.