Friday, March 29, 2024

பட்டுக்கோட்டையை சேர்ந்த வித்யா என்பவர் காணவில்லை..,தனியார் பேருந்தில் சென்றபோது கடத்தப்பட்டாரா என சந்தேகம்..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் வித்யா.இவருடைய கணவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மாலை கீரனூர் செல்ல பட்டுக்கோட்டையில் பேருந்தில் பயணித்து உள்ளார். வித்யா தன்னுடைய பிள்ளையாகிய தனுஷ் என்ற குழந்தையையும் அழைத்து சென்றுள்ளார்.இந்நிலையில்,இவர் தஞ்சை சென்ற அதன்பின்னர் கீரனூர் வழியாக திருச்சி செல்ல PLA TRANSPORT என்ற தனியார் பேருந்தில் பயணித்து உள்ளார்.

இந்நிலையில் இவர் தன்னுடைய உறவினர்களுக்கு இரவு சரியாக 8மணியளவில் தன்னுடைய பட்டுகோட்டை வீட்டிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.இதனைத்தொடர்ந்து, தொலைபேசியை வித்தியாவின் வீட்டார் ON செய்து பேசியுள்ளனர்.ஆனால்,வித்யா பேச ஆரம்பித்ததும் யாரோ தொலைபேசியை அவர்களிடம் இருந்து புடுங்கி வித்யாவை தாக்கியது போல் சத்தம் கேட்டதாக பலர் தகவல் தெருவிக்கின்றனர்.

இதனையடுத்து, வித்யாவின் தொலைபேசி அதன் பின்னர் துண்டிக்கப்பட்டதாகவும் அவரின் உறவினர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், வித்யா கடத்தப்பட்டாரா என்ற கோணத்தில் அவருடைய உறவினர்கள் காவல் துறையினரிடம் வழக்கு பதிவு செய்தனர்.

ஆனால்,தற்பொழுது வரை அவர்கள் இருவரும் கிடைக்கவில்லை என்றும், எங்கேயும் கிடைத்தால் எங்களை தொடர்புகொள்ளுங்கள் என்றும் அவரின் உறவினர்கள் கேட்டுக்கொண்டனர்.

வித்யா மற்றும் குழந்தையின் அடையாளங்கள்:-

பெயர்:-வித்யா

வயது:-25

ஊர்:-பட்டுகோட்டை

காணாமல் போன அன்று அணிந்து இருந்த ஆடை:- ஆரஞ்சி கலர் புடவை

குழந்தையின் பெயர்:-தனுஷ்

இவர்களை எங்கு கண்டாலும் உடனே தொடர்புகொள்ள வேண்டிய எண்:- 7639832530,6381260769.

ஆகவே,பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும், முடிந்த அளவு வெளியில் ஆண் துணையுடன் செல்லவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...