Friday, April 19, 2024

இம்மாத இறுதியில் “ஹெச்டி” செட்டப் பாக்ஸ் இணைக்க அரசு முடிவு…!!!

Share post:

Date:

- Advertisement -

இம்மாத இறுதியில் ‘ஹெச்டி’ இணைப்பைத் தர முடிவெடுத்துள்ளோம். இதன்படி ரூ.225க்கு 380 வழக்கமான சேனல்களுடன் 30 ஹெச்டி தர சேனல்களும் கிடைக்கும் என அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம், முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் ‘பிரீபெய்டு’ திட்டத்துடன் கூடிய ‘ஹெச்டி’ செட்டாப் பாக்ஸ்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

`ஹெச்டி’ தரம் கொண்ட செட்டாப் பாக்ஸ் தொடர்பாக அரசு கேபிள் டிவி நிறுவத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “தற்போது பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ரூ.175க்கான 300 சேனல்கள் கொண்ட தொகுப்பையே விரும்பிப் பெற்றுள்ளனர்.

இந்தச் சேவையை மேம்படுத்தும் வகையில், இம்மாத இறுதியில் ‘ஹெச்டி’ இணைப்பைத் தர முடிவெடுத்துள்ளோம். இதன்படி ரூ.225க்கு 380 வழக்கமான சேனல்களுடன் 30 ஹெச்டி தர சேனல்களும் கிடைக்கும். இதற்கு வழக்கமான கட்டணத்துடன் 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
அதேபோல, முன்கூட்டியே பணத்தைச் செலுத்தும் ‘பிரீ பெய்டு’ முறையும் விரைவில் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். செட்டாப் பாக்ஸ்கள் பழுதடைந்தால் சரிசெய்யவும், மாற்றித் தரவும் மாவட்டத்துக்கு ஒரு சேவை மையம் அமைத்துள்ளோம்.

வாடிக்கையாளர்கள் 1800 425 2911 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.முன்னதாக தமிழகத்தில் உள்ள கேபிள் டிவி நிறுவன வாடிக்கையாளர்களுக்கு இலவச செட்டாப் பாக்ஸ்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிவைத்தார்.

இதுவரை 13,28,843 செட்டாப் பாக்ஸ்கள் இணைக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்துள்ளன.சென்னையில் மட்டும் 30 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டு, 22 ஆயிரம் பாக்ஸ்கள் இணைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...