Saturday, April 20, 2024

டிடிவி தினகரனின் கோரிக்கையினை நிராகரித்த தேர்தல் ஆணையம்..!!

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் உட்பட எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்த குக்கர் சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் டிடிவி.தினகரன் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது இது குறித்து தேர்தல் ஆணையம், “டிடிவி.தினகரன் தனியாக கட்சி எதுவும் தொடங்கவில்லை. அவர் அதிமுகவின் தனி அணியும் கிடையாது. மேலும் அவர் கட்சி சம்பந்தமாக எந்த ஒரு பெயரையும் தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவில்லை. அப்படி இருக்கையில் இடைத்தேர்தலில் கொடுக்கப்பட்ட குக்கர் சின்னத்தை தினகரன் எப்படி கேட்க முடியும்” என்று கூறினர். இதையடுத்து ஈபிஎஸ் தரப்பில் ஆஜரான முன்னாள் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரும், தினகரனின் மனுவினை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றே கேட்டுக்கொண்டதால்.

இதனையடுத்து தினகரன் சார்பில், “எங்களது தரப்பில் கடந்த 15ம் தேதி தாக்கல் செய்த 3 கட்சியின் பெயரை போலியான நபர்களை கொண்டு எதிர் அணியான முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அதே கட்சியின் பெயரை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தை அணுக முயற்சிக்கின்றனர்.

“இதனை நீதிமன்றம் கருத்தில் கொண்டு போலியாக பதிவு செய்பவர்களை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று கூறப்பட்டது. இதனையடுத்து நீதிபதி இந்த வழக்கினை வருகிற திங்கட்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...