Friday, April 19, 2024

தேனியில் அரசு விழாவில் நடைபெற்ற அவலம்!

Share post:

Date:

- Advertisement -

தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்ற நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுகளை மீண்டும் திரும்பப் பெற்ற சம்பவம் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

பள்ளிக் கல்விதுறை சார்பாக தேனியில் நடத்தப்பட்ட கலைத் திருவிழாவில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவியரின் பரத நாட்டியம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கண்கவர் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு அலுவலர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பள்ளி மாணவர்களுக்கு இடையிலான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழை துணை முதல்வர் ஓ.பி.எஸ். வழங்கினார்.

பரிசுகளை பெற்ற மாணவ, மாணவிகளிடம் இருந்து பரிசுகளை திரும்பப் பெற்றுக் கொண்ட ஆசிரியர்கள், அவற்றை பள்ளிக்கு வந்த பின் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறியதாக தெரிகிறது. பள்ளிக் கல்வித்துறை நிகழ்ச்சியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் பெற்றோரை அதிருப்தியடையச் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...