தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை தெரு பகுதியில் உள்ள ஒரு மின் கம்பம் பல நாட்களாக பழுதடைந்து கீழே விழும் நிலையில் இருந்தது.
இதனை தொடர்ந்து, தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தினர் அதிரை மின்வாரிய துறை அதிகாரியை நேரில் சந்தித்து மின்கம்பத்தை மாற்றக்கோரி மனு அளித்தனர்.
இதையடுத்து, மின்வாரிய துறை அதிகாரி அந்த மின் கம்பத்தை உடனடியாக மாற்றுவதற்கான நடவடிக்கையை சுமார் ஒரு மணிநேரத்தில் முடித்து அப்பகுதியில் நேற்று(31/01/2018) காலை புதிய மின் கம்பத்தை அப்பகுதிக்கு தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர், இளைஞர்கள் உதவியில் கொண்டு வந்தார்.
இதனை தொடர்ந்து, நாளை காலை இதற்கான முழு பணிகளும் துவங்கும் என உறுதியளித்துள்ளார்.
ஆகவே,அதிரை மின்வாரிய துறை அதிகாரியை தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தின் நன்றிகளுடன் பாராட்டையும் தெரிவித்தனர்.