Friday, April 19, 2024

வதந்திக்கு முற்றுப்புள்ளி குத்திய கலைஞர் : தொண்டர்கள் மகிழ்ச்சி!!

Share post:

Date:

- Advertisement -

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் சிறுநீரக நோய்த்தொற்று மற்றும் ரத்த அழுத்தம் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவருடைய உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டதாக மருத்து அறிக்கை வெளியானது. இதனால் சென்னை முழுதும் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

காவேரி மருத்துவமனை அருகில் ஏராளமான திமுக தொண்டர்கள் இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்து கதறிக் கொண்டிருக்கும் வேலையில், தொண்டர்களை களைந்து செல்லுமாறும் காவல்துறையினர் உத்தரவிட்டனர். ஆனாலும் சில தொண்டர்கள் களைய மறுத்து விரக்த்தியில் அங்கே வைக்கப்படிருந்த தடுப்பு (பேரிகார்டுகளை) தூக்கி வீசினர். இதனால் லேசான தடியடி நடத்தப்பட்டது.

இருப்பினும் தீவிர சிகிச்சைக்குப் பின் கலைஞரின் உடல் நிலை சீராக உள்ளது என்றும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இரவு முழுதும் திமுக தொண்டர்கள் விழித்திருந்து காவேரி மருத்துவமனை அருகில் கூடி ‘தலைவா நீ எழுந்து வா’ என்ற கோஷங்கள் இட்டு கொண்டிருந்தனர்.

இதனையடுத்து இன்று மாலை காவேரி மருத்துவமனைக்கு சென்ற அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலைஞரின் உடல் நலம் பற்றி கேட்டறிந்தார்.

கலைஞர் கருணாநிதி சீராக இருப்பதாகவும் அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காண்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச் சந்திப்பின் இடையே தற்போது சிகிச்சை பெற்று வரும் கலைஞரின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தில், கலைஞர் கண் விழித்து ராகுலை பார்த்த வண்ணமாகவும், அவரிடம் மு.க.ஸ்டாலின் காதில் ராகுல் வருகையையும் கலைஞருக்கு தெரிவிப்பது போன்று உள்ளது.

இப் புகைப்படத்தினால் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் நிம்மதி பெரு மூச்சு விட்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...