சென்னையின் ஷாஹீன் பாக் எனப்படும் வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இன்றும் 4வது நாளாக போராட்டமானது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் போராட்டகளத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்காக ஹிந்துக்கள் உணவு சமைத்து வழங்கி வருகின்றனர்.
இதன் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு, இதுதான் தமிழ்நாடு என்றும், மதநல்லிணக்கத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்றும் வலைதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.