Saturday, April 20, 2024

முறையான வடிகால் வசதி இல்லாததால் சாலையிலேயே தேங்கிக்கிடக்கும் மழைநீர் !

Share post:

Date:

- Advertisement -

அதிரை மெயின் ரோட்டிலிருந்து கடைத்தெரு செல்லும் பிரதான சாலையில் மழைநீர் ஆங்காங்கே குட்டை போல் தேங்கிக்கிடக்கிறது. தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இச்சாலை வழியாக சென்று வருகின்றன.

வணிக நிறுவனங்கள், மருந்து கடைகள் என அத்தியாவசிய நிறுவனங்கள் பல இச்சாலையில் அமைந்துள்ளன. அதுமட்டுமின்றி அதிரை பேருந்து நிலையத்திற்கு செல்லும் முக்கிய சாலையாகவும் இது இருக்கிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலை வாகனங்கள் இயக்குவதற்கு துளியும் தகுதி இல்லாததாக இருக்கிறது. ஏனெனில் சாலை முழுவதும் ஆங்காங்கே பள்ளம் விழுந்து காணப்படுகிறது. அதுமட்டுமின்றி அப்பள்ளங்களில் மழைநீர் தேங்கி பலநாட்களாக அப்படியே கிடக்கிறது. இதனால் தொற்று நோய் மற்றும் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே அதிரை பேரூராட்சி நிர்வாகம் இச்சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தி முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...