Tuesday, April 23, 2024

முறையான குடிநீர் விநியோகம் இல்லாததால் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் !

Share post:

Date:

- Advertisement -

அதிரையை அடுத்துள்ளது ஏரிப்புரக்கரை ஊராட்சி. இங்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறி பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் பகுதியில் உயர்நிலை நீர்தேக்க தொட்டி ஒன்று இருப்பதாகவும் , அந்த நீர்தேக்க தொட்டியானது முறையான பராமரிப்பு இன்றி மிகவும் அசுத்தமான நிலையில் உள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

அந்த உயர்நிலை நீர்தேக்க தொட்டியில் நீர் இருந்தும் , பொதுமக்களின் தேவைக்காக திறந்து விடுவதில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் 15 நாளைக்கு ஒரு முறையே குடிநீர் வினியோகிக்கப்படுவதாக புகார் கூறும் அப்பகுதி மக்கள் , இனி வரும் காலங்களில் முறையான குடிநீர் வினியோகம் இல்லையென்றால் , கிராம மக்கள் ஒன்று திரண்டு அதிரை பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...