குடியுரிமை திருத்த சட்டம் திரும்பபெற கோரியும் CAA- NRC- NPR எதிராகவும் நாடுமுழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் நடத்தும் CAA-NRC-NPR எதிர்த்து கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் எதிர்வரும் திங்கள்கிழமை (10-02-2020) அன்று நடைபெற உள்ளது.
மேலும் முத்துப்பேட்டை நகர் முழுவதும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும் கருப்பு சட்டை அணிந்தும் போராட்டம் நடைபெற உள்ளது.
இதில் அனைவரும் கலந்துகொண்டு எதிர்ப்பினை தெரிவிக்குமாறு கேட்டுக்கொணடனர்.