Friday, March 29, 2024

மாணவர்களை கல்லணை கால்வாயில் தள்ளிவிட்ட அதிரை காவல் ஆய்வாளர்…??

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஊரணிபுரம் கல்லணை கால்வாய் வாய்க்கால் அருகே கடந்த 7ஆம் தேதி இரண்டு டாஸ்மாக் கடைகள் புதிதாக திறக்கப்பட்டன. இந்த கடைகளை மூடக்கோரி ஊரணிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் கிராமங்களில் உள்ள பொதுமக்கள் அனைவரும் கடந்த 9ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஒரத்தநாடு தாசில்தார் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரத்திற்குள் டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். ஆனால் டாஸ்மாக் கடைகளை அகற்றவில்லை.

பிறகு (26.07.2018) அன்று ஊரணிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பொதுமக்கள், மாணவர்கள், பல கட்சியினர் உட்பட 1500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர்.

இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட 1500 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அப்போது கல்லணை கால்வாய் அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட 4 மாணவர்களை அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தாக்கி கால்வாய்க்குள் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...