தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் மீனவர்கள் தங்களுடைய வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்.
ஹைட்ரோ கார்பன்,மீத்தேன் எடுக்கும் திட்டங்களுக்கு எதிராகவும்,மீனவர்களின் வாழ்வாதரத்தை கேள்விக்குறியாக்கும் திட்டங்களை கண்டித்தும் மல்லிப்பட்டிணம் மீனவர்கள் கருப்புக் கொடிகளை ஏந்தியும்,இன்று(20.7.2019) தங்களுடைய வீடுகளில் கொடிகளை ஏற்றியும் மத்திய,மாநில அரசுகளுக்கு எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
இது குறித்து தமிழ்நாடு மீனவர் பேரவை பொதுச் செயலாளர் AK.தாஜுதீன் தெரிவிக்கையில், மீத்தேன்,ஹைட்ரோ கார்பன் போன்ற மக்கள் விரோத திட்டங்களுக்கு அந்தப்பகுதி மக்களிடம் கருத்துக்களை கேட்காமல் சர்வாதிகார போக்கில் செயல்படுத்த முனைகிறது,அதேப்போல் மீனவர்களின் வாழ்வாதரங்களை பாதிக்கும் திட்டங்களை செயல்படுத்த துடிக்கிறது,ஆகவே இதுபோன்ற திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் அடையாள போராட்டத்தை நடத்தி வருகிறோம் என்று கூறினார்.