Friday, March 29, 2024

மருத்துவரை தாக்கியதால் திருவாரூர் பா.ஜ.க தலைவர் கைது..!!

Share post:

Date:

- Advertisement -

 

அரசு மருத்துவரை தாக்கியதாக திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பேட்டை சிவா கைது செய்யப்பட்டுள்ளார்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதார துறை மூலம் மலேரியா தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டன இதனை உட்கொண்ட, பேட்டை கிராமத்தைச் சேர்ந்த 8 பேருக்கு கடந்த 29 ஆம் தேதி வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதை கேட்டறிய சென்ற பாஜக தலைவர் பேட்டை சிவா, அங்கு பணியில் இருந்த அரசு மருத்துவர் அரவிந்த் என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது மருத்துவரை பேட்டை சிவாவுடன் வந்த அவரது ஆதரவாளர்கள் தாக்கினர்.

இதுகுறித்து அரவிந்தன் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து பேட்டை கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் மற்றும் பிரபாகரன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து பாஜக மாவட்டத் தலைவர் பேட்டை சிவாவை இன்று போலீசார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...