திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அமமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மண்டல பொறுப்பாளர் ரெங்கசாமி தலைமை வகித்தார்.திருவாரூர் மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ் வரவேற்றார்.
கூட்டத்தில் கட்சியின் துணைபொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் 200 தொகுதிகளில் அமமுக வெற்றி பெறும். மேலும் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்று நிரூபணம் ஆகிவிடும் என்று கூறினார்.மாநில அரசை கடுமையாக சாடி உரையாற்றினார்.நகரச்செயலாளர் நன்றியுரை ஆற்றினார்.
இப்பொதுக்கூட்டத்தில் திரளான அதிரை அமமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என திரளாக கலந்துகொண்டனர்.