Friday, April 19, 2024

மத்திய, மாநில அரசுகளுக்கு நெடுவாசல் பொதுமக்கள் எச்சரிக்கை!

Share post:

Date:

- Advertisement -

நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், வரும் ஏப்ரல் 12ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதியளித்ததை கண்டித்து, கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 16ம் தேதி நெடுவாசல் பகுதியில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்துக்கு ஆதரவளித்ததாலும், போராட்டம் வலுத்ததாலும், ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என மத்திய, மாநில அரசுகள் உறுதியளித்தன.

ஆனால், உறுதியளித்தபடி எந்த உத்தரவாதமும் நிறைவேற்றப்படவில்லை என்பதால், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி நெடுவாசலில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ஏப்ரல் 12ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக நெடுவாசல் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...