Thursday, March 28, 2024

பேரிகார்டை இழுத்து செல்வது கெத்து என நினைத்தேன்… புத்தாண்டில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்!!!

Share post:

Date:

- Advertisement -

சென்னை: சென்னையில் தீப்பொறி பறக்க பைக் ரேஸ் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். பேரிகார்டை தீப்பொறி பறக்க இழுத்து சென்ற இளைஞர் பீட்டர் மன்னிப்பு கேட்டார். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பைக் ரேஸ் நடத்துவதை போலீஸார் கண்காணித்து வந்தனர். எனினும் அவர்களையும் மீறி சில இளைஞர்கள் ரேஸில் ஈடுபட்டனர்.

சென்னை காமராஜர் சாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 3 இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மேம்பாலத்தில் யாரும் பயணம் செய்ய கூடாது என்பதற்காக போலீஸார் பேரிகார்டை வைத்து தடுத்திருந்தனர். அப்போது அந்த பேரிகார்டை பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர் இழுத்து சென்றார். அப்போது சாலையில் தீப்பொறிக்கும் வகையில் நெஞ்சை பதைபதைக்கும் இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். அதில் ஒரு இளைஞர் தனது பேஸ்புக் பக்கத்தில் இதை வீடியோவாக எடுத்து தம்பட்டம் அடித்து கொண்டார். இதையடுத்து போலீஸார் 3 பேரை கைது செய்தனர். இதில் பேரிகார்டை இழுத்து சென்ற இளைஞர் பீட்டர் மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த வீடியோவை தற்போது போலீஸார் வெளியிட்டுள்ளனர். அதில் அவர் கூறுகையில் பேரிகார்டை தீப்பொறி பறக்க இழுத்து செல்வது கெத்து என நினைத்தேன். இப்போதுதான் இதனால் பொதுமக்கள் எத்தகைய இன்னலை சந்தித்திருப்பர் என்பது தெரிந்தது. இனிமேல் இது போல் தவறு செய்ய மாட்டேன் என்று மன்னிப்பு கேட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...