Thursday, March 28, 2024

புத்தம் புது காலையில், ஈசிஆர் சாலை நாயகன் உடற்பயிற்சி!!

Share post:

Date:

- Advertisement -

இன்றைய நவீன உலகில் நிறைய மாற்றங்கள் உள்ளன. அத்தகைய மாற்றங்களால், நம் வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் மாறுகின்றன. இதனால் உடல் சார்ந்த பிரச்சனைகள் நிறையவே ஏற்படுகின்றன.

அதிகாலையில் நாம் செய்யும் உடற்பயிற்சி உடலுக்கு தரும் ஓர் உன்னத புத்துணர்ச்சி என்பதை மறந்து தேவையற்ற செயல்களில் அதிகாலை பொழுதினை கழித்து வருகிறோம்.

ஆனால் மல்லிப்பட்டினத்தை சேர்ந்த அப்துல் ஃபஹத் எனும் இளைஞர் இரண்டு வருடங்களுக்கு மேலாக கிழக்கு சாலையில் (ECR) ராஜாமடத்திலிருந்து அதிரை ரயில்வே கேட் வரையிலும் தினமும் புத்தம் புதிய அதிகாலையில் ஜாக்கிங் உடற்பயிற்சியை மேற்க்கொண்டு வருகிறார்.

இந்த ஈசிஆர் நாயகனின் ஜாக்கிங் ஓட்டம் அதிரையர்களை வெகுவாக கவர்ந்துள்ளது மட்டுமின்றி கான்போர்களையும் ஜாக்கிங் உடற்பயிற்சி செய்ய தூண்டியுள்ளது.

இதனால் அதிரையர்கள் தற்போது அதிகமானோர் ஜாக்கிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தன்னுடைய உடற்பயிற்சி மூலம் மற்றவர்களையும் உடற்பயிற்சி செய்ய வைக்கும் இவரின் முயற்சியை அதிரையர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ஈசிஆர் நாயகன் அப்துல் ஃபஹத் அதிரை திலகர் தெரு மாஜிதா ஜீவல்லரிக்கு எதிரில் கிரீன் மொபைல் என்கிற கடை வைத்து நடத்தி வருகிறார்.

மல்லிப்பட்டனத்திலிருந்து மீன் பிடித்து அதிரை நோக்கி வருவது போல, ரஜாமடத்திலிருந்து அதிரையை நோக்கி புத்தம் புது காலையில் புயலாய் ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி மேற் கொண்டிருக்கும் ஈசிஆர் நாயகன் அப்துல் ஃபஹத்தை நாமும் வாழ்த்துவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...