பட்டுக்கோட்டை டிஎஸ்பி-யாக எஸ். கணேசமூர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் இன்று பட்டுக்கோட்டையில் டிஎஸ்பி கணேசமூர்த்தியை சந்தித்த அதிரை திமுக நிர்வாகிகள், அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதில் அதிரை திமுகழக செயலாளர் இராம.குணசேகரன், திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் தஞ்சை மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம், மாவட்ட சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த மரைக்கா. இத்ரீஸ், மாவட்ட பிரதிநிதி பகுருதீன், முன்னாள் கவுன்சிலர் சரீஃப் மற்றும் முல்லை மதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.