அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி ஏடி.எம் மெஷினில் பணம் செலுத்துவதற்காக சென்ற அப்துல் மாலிக் அவர்களின் மகன் மற்றும் அவரது நண்பர் சுஹைல் இருவரும் பணம் செலுத்தும் இயந்திரம் அருகே யாரோ தவறுதலாக விட்டுச் சென்ற ₹45,000 ரொக்கத்தை எடுத்து உடனடியாக காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பள்ளி பயிலும் மாணாக்கர்கள் ஆங்காங்கே குற்றச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, இந்த இமாம் ஷாஃபி பள்ளி மாணவர்கள் நேர்மையுடன் பணத்தை ஒப்படைத்ததற்கு அதிரை காவல்துறையினரும், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரிய ஆசிரியைகளும் அனைவரும் இச் செயலுக்காக பாராட்டினர்.