Thursday, March 28, 2024

திருச்சியிலிருந்து மலேசியா புறப்பட்ட விமானத்தில் கோளாறு… 167 பயணிகள் உயிர் தப்பினர் !

Share post:

Date:

- Advertisement -

167 பயணிகளுடன் திருச்சியிலிருந்து மலேசியாவுக்குப் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் 20 மணி நேரம் தாமதாக புறப்பட்டுச் சென்றது.

கோலாலம்பூரிலிருந்து சனிக்கிழமை இரவு 10 மணிக்கு ஏா் ஏசியா விமானம் திருச்சி வந்தது. இதே விமானத்தில் கோலாலம்பூா் செல்ல பதிவு செய்திருந்த 167 பயணிகள் பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு அமர வைக்கப்பட்டார்கள்.

விமானம் ஓடு தளப்பாதைக்கு சென்று, மேலே பறக்க முயற்சித்த போது தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார். அத்துடன் விமானத்தை ஏரோ பிரிட்ஜ் பகுதிக்கு கொண்டு வந்தார்.

தகவலறிந்து வந்த பொறியாளா்கள் குழுவினா், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா்.எனினும் என்ஜின் பகுதியில் ஆயில் கசிவு காரணமாக ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை உடனடியாக சரி செய்வதில் சிக்கல் நீடித்தது.

இதையடுத்து மலேசியாவில் இருந்து உதிரிப்பாகம் வரவழைக்கப்பட்டு சரி செய்யப்பட்டது. 20 மணி நேரத் தாமதத்துக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு 143 பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது. இதற்கிடையே கோளாறு காரணமாக பயணிகள் தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனா். சிலா் அடுத்தடுத்த விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ளவா்கள் தங்களது பயணத்தை ரத்து செய்துவிட்டு, வேறு தேதிகளில் முன்பதிவு செய்துக் கொண்டனா். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக கோளாறு காரணமாக பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...