தமிழ்நாடு அளவிலான மாநிலம் தழுவிய தப்லிக் இஜ்திமா வருகிற ஜனவரி 26,27 மற்றும் 28 ஆகிய தினங்களின் திருச்சி அருகே உள்ள இனாம்குளத்தூரில் நடைபெறவுள்ளது.
இந்த இஜ்திமாவில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்த உலமாக்கள் மற்றும் பொதுமக்கள் லட்சக்கணக்கில் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்நிலையில், இந்த இஜ்திமாவிற்கான இறுதிக்கட்ட பணிக்கள் தற்பொழுது தீவிரம் அடைந்து வருகிறது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி பிராத்தனை செய்யும் அளவிற்கு பல ஏக்கர் அளவிலான நிலத்தில் நடைபெறுகிறது.
இந்த இஜ்திமாவிர்க்கு வருகை தரும் அனைத்து வாகனங்களுக்கும் சுங்க வரி வசூலிக்கப்படாது என்றும் அரசின் சார்பில் அறிவித்துள்ளனர்.
இந்த இஜ்திமாவிற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தநிலையில் தற்பொழுது இறுதிக்கட்ட பணிக்காக தீவிரம் அடைந்து வருகிறது.