Thursday, April 18, 2024

தமிழகத்தில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் !

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு முதல் 8 ஆண்டுகளாக அவர் சுகாதாரத்துறை செயலராக பதவி வகித்து வந்தார். இதேபோல் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் திருச்சி, கோவை, புதுக்கோட்டை ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இடமாற்ற விவரம் :

◆பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் பேரிடர் மேலாண் இயக்குனராக மாற்றம்

◆ஓமியோபதி ஆணையராக இருந்த பியூலா ராஜேஷ் சுகாதாரத்துறை செயலராக மாற்றம்

◆திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி கோவை ஆட்சியராக மாற்றம்

◆சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நகராட்சி நிர்வாக ஆணையராக மாற்றம்

◆திருச்சி மாவட்ட ஆட்சியராக எஸ்.சிவராசு நியமனம்

◆ஐஏஎஸ் அதிகாரி நாகராஜனுக்கு சுகாதாரத்துறை திட்ட இயக்குநராக நியமனம்

◆கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துறை சிறப்பு செயலாளராக நியமனம்

◆வணிகவரித்துறை முதன்மை செயலாளர் பாலச்சந்திரன், பதிவுத்துறை ஐஜி ஆக இடமாற்றம்

◆தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, புதுக்கோட்டை ஆட்சியராக பணியிட மாற்றம்

◆புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ், இந்திய மருத்துவ இயக்குநராக பணியிட மாற்றம்

◆பத்திரப்பதிவு ஐ.ஜி குமரகுருபரன், பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றம்

◆நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ், சென்னை மாநகராட்சி ஆணையராக பணியிட மாற்றம்

◆கோவை மாநகராட்சி கே.விஜயகார்த்திகேயன் தமிழ்நாடு ஊரக கல்வி நிறுவன இயக்குநராக மாற்றம்

◆தமிழ்நாடு குடிநீர், வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குநர் ஆனந்த், திருவாரூர் ஆட்சியராக மாற்றம்

◆சுகாதாரம், குடும்ப நலத்துறை கூடுதல் இயக்குநர் நாகராஜன், சுகாதார அமைப்பு திட்ட இயக்குநராக மாற்றம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...