தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிச்சாமி, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் ஒன்று உருவாக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பதிலுரை ஆற்றினார். அப்போது சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ குமரகுரு ஆகியோரின் கோரிக்கையை ஏற்று விழுப்புரம் பெரிய மாவட்டமாக இருப்பதால் கள்ளக்குறிச்சி தனிமாவட்டமாக உருவாக்கப்பட இருப்பதாக அறிவித்தார்.
விரைவில் உருவாகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிய ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்படுவார் என்றும் எடப்பாடி அறிவித்தார். தமிழகத்தின் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.