திண்டிவனம் அருகே நடந்த சாலை விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி., ராஜேந்திரன் உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், ஜக்காம்பட்டியில் உள்ள வீட்டிலிருந்து அதிமுக எம்.பி., ராஜேந்திரன், அவரது உறவினர் தமிழ்ச்செல்வன், ஓட்டுநர் செல்வம் ஆகியோர் கார் ஒன்றில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். திண்டிவனம் – மயிலம் சாலையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் எம்.பி., ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தமிழ்ச்செல்வன், ஓட்டுநர் செல்வம் ஆகியோர் காயமடைந்தனர்.
தகவலறிந்து அங்கு விரைந்த போலீஸார், ராஜேந்திரன் உடலை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.