அதிராம்பட்டினம் கீழத்தெரு சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நேற்று திங்கட்கிழமை அதன் அலுவலகத்தில் கீழத்தெரு முஹல்லா நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது.
இதில் தலைவராக தாஜூதீன், செயலாளராக சேக்தாவூது மற்றும் பொருளாளராக மன்சூர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் கீழத்தெரு இளைஞர் அணியும் தேர்வு செய்யப்பட்டது. அதில் கீழத்தெரு இளைஞர் அணி தலைவராக புகாரி, செயலாளராக முகம்மது பொருளாளராக ஃபாமி மற்றும் ரிலா, துணை தலைவராக சர்பத்கான், துணை செயளாளர்களாக பைசல், ஜிபிரில், அசார், முகமது அஸ்லம், நிஜாம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் மேலாண்மை குழு நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். இதில் தமீம், சேக்தாவூது, சேக்தாவூது, Y.சேக்தாவூது , A.முகமது பாவாஜி , A.சேக்(மான்), இஸ்மாயில், M.அஜ்மல்கான், M.நூருல்அமீன், B.சேட் ஆகியோர்கள் மேலாண்மை குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இளைஞர் அணி, மேலாண்மை குழு கண்காணிப்பின் கீழ் செயல்படும் என்றும், இந்த இளைஞர் அணி நிர்வாகம் ஒரு வருடத்திற்கு ஒருமுறை தேர்வு செய்யப்படும் என்றும் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.