Wednesday, April 24, 2024

காலியாகும் அமமுக கூடாரம்… திமுகவில் இணைந்தார் வி.பி. கலைராஜன் !

Share post:

Date:

- Advertisement -

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்தவர் வி.பி. கலைராஜன்.

தி. நகர் முன்னாள் எம்எல்ஏ வான இவர் அதிமுகவில் மாநில மாணவரணி செயலாளராகவும், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர். அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது டிடிவி. தினகரன் அணியில் இருந்து செயலாற்றி வந்தார்.

இந்நிலையில் வி.பி. கலைராஜனை தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாகவும், அவருடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்றும், தென் சென்னை வடக்கு மாவட்ட புதிய செயலாளராக சுகுமார் பாபு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் டிடிவி. தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக இன்று திருச்சியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்த வி.பி. கலைராஜன், தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். ஏற்கனவே டிடிவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...