அரசியலில் ஒரு சீட்டு கிடைக்கும் என்றால் யாரும் யாரோடும் கூட்டு வைக்கும் ஈனத்தனமான நிலை தான் நம் நாட்டின் அரசியல்வாதிகளின் நிலை
கொள்கை மக்கள் சேவை என்பதெல்லாம் அரசியல்வாதிகளின் மேடை பேச்சின் டயலாக்குகள் தான்
இந்த ஈனத்தனத்தை தேவையான நேரம் நடைமுறை படுத்துவதற்க்கு தான் அரசியல்வாதிகள்
1 மறப்போம் மன்னிப்போம்
2 அரசியலில் நிலையான நண்பனும் இல்லை விரோதியும் இல்லை
என்ற ஏமாற்று வறட்டு தத்துவங்களை கண்டு பிடித்து உள்ளனர்
மேடைகளில் பரம எதிரிகளை போல் மாறி மாறி பேசும் அனைத்து கட்சியினர்களும் அந்தரங்கத்தில் ஒட்டி உறவாடுவார்கள்
நம் நாடு சுதந்திரம் அடைந்த காலம் முதல் இப்போது வரை எல்லா அரசியல்வாதிகளும் கட்சிகளும் இந்த பச்சோந்தி தன்மையை பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி உண்மைபடுத்தியவர்கள் தான்
இதில் இந்த கட்சி புனிதம்
அந்த கட்சி புனிதம் என்று
எந்த கட்சியையும் பாராட்டி சொல்ல முடியாது
இந்த பச்சோந்திகளுக்காக தன்னையே வருத்தி கொண்டு தன் இனத்தின் காவலர்களாக அரசியல்வாதிகளை நினைப்பது மக்களின் மடமைத்தனம்
இந்த மடமைத்தனத்தில் முஸ்லிம் சமூகமும் விதி விலக்கு இல்லை என்பதே வேதனை தரும் செய்தியாகும்
நட்புடன் J . இம்தாதி