Thursday, April 18, 2024

கஜா புயல் நிவாரணம் ரூ.1401 கோடி ஒதுக்கீடு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்…

Share post:

Date:

- Advertisement -

 

கஜா புயல் பாதிப்புகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரியும், தேசிய பேரிடராக அறிவிக்க கோரியும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில்,  தமிழக  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், கஜா புயலினால் பாதிக்கப்பட்ட  நாகை, திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 63 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  மீட்பு நடவடிக்கைகள் போர் கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும், மீட்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒரு உதவி ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், புயல் வருவதற்கு முன்பே தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகுகளை இழந்த மீனவர்களுக்கு 5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.  நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு 1401 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும்,  மத்திய அரசின் பேரிடர் மீட்பு நிதியத்திலிருந்து தமிழக அரசிற்காக 353 கோடி வழங்க உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை டிசம்பர் 12-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வு உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...