Thursday, March 28, 2024

கஜா புயலால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு தென்னை மரங்கள் வழங்கும் நிகழ்ச்சி !

Share post:

Date:

- Advertisement -

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் சூறையாடியது. இதனால் பல இடங்களில் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. புயலால் தென்னை விவசாயிகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று பட்டுக்கோட்டை வாசுகி திருமண மண்டபத்தில் கஜா புயலின் போது தென்னை மரங்களை இழந்த விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

பாரத் பெட்ரோலியம், சிவகாசி முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி, KSR கல்லூரியின் 2002-2004ஆம் ஆண்டு ஐடி துறையைச் சார்ந்த மாணவர்கள் ஆகியோருடன் இணைந்து பட்டுக்கோட்டை இந்திரா காந்தி யூத் ஃபவுண்டேஷன் சார்பில் இந்த தென்னை மரங்கள் வழங்கப்பட்டன.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய கமிட்டி உறுப்பினர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்னை விவசாயிகளுக்கும் புயலால் தென்னை மரங்களை இழந்தவர்களுக்கும் தென்னை மரங்கள் வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...