கடந்த 15ஆம் தேதி தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் தாக்கப்பட்டது.குறிப்பாக அதிராம்பட்டினத்தில் 111 வேகத்தில் புயல் கரையை கடந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் மக்கள் தங்களுடைய உடமைகளை இழந்து தவித்தனர்.இதனை அறிந்து சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர் அமைப்புகள் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பொருட்கள் வழங்கி வருகின்றனர்.
அதைப்போன்று பட்டுக்கோட்டையில் வசித்து வரும் 10 திருநங்கைகள் அவர்களின் கஜா புயலால் வீடுகளை இழந்து தவித்து வந்தார்.இதனை அறிந்து அதிராம்பட்டினம் அல் அமீன் பள்ளிவாசல் கஜா புயல் நிவாரண முகாமிலிருந்து அக்குழுவின் ஒருங்கிணைப்பளார் பேராசிரியர் கா. சையது அகமது கபீர் தலைமையில் வ. விவேகானந்தம், டி. நவாஸ் கான், அதிரை மைதீன், பைசல் அஹமது ஆகியோர் கலந்துக்கொண்டு முதற்கட்டமாக உணவுப்பொருட்கள் , பாய், போர்வைகள் ,துண்டு, சோலார் லைட்கள் ஆகிய பொருட்களை வழங்கினார்கள்.