Friday, April 26, 2024

கஜானாவில் பணம் இல்லையாம்,ஆனால் மானிய ஸ்கூட்டர் திட்டம்..??

Share post:

Date:

- Advertisement -

தமிழக அரசின் மானிய ஸ்கூட்டர் திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சம் பெண்களுக்கு ‘ஸ்கூட்டர் மானியம்’ திட்டத்தின் கீழ் நிதி வழங்கிட ஆண்டுக்கு 200 கோடி ரூபாயை ஒதுக்கிட முடிவு செய்திருக்கிறது தமிழக அரசு.

ஸ்கூட்டர் மானியம் பெற விரும்பும் பெண்களுக்கான தகுதிகள் என்னென்ன? அதை பெற எப்படி விண்ணப்பிப்பது? போன்ற தகவல்களை அந்தந்த மாவட்ட ஆட்சியரகம் சார்பில் மீடியாக்கள் மற்றும் பத்திரிக்கைகளின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து வரும் 24 ஆம் தேதி மானிய ஸ்கூட்டர் திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

இதனிடையே போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது தமிழக அரசு நிதி பற்றாக்குறை இருப்பதாக கூறி இழுக்கடித்தது. ஆனால் போராட்டம் தொடர்ந்ததால் ஊதிய உயர்வு அமலுக்கு வந்தது.

இந்நிலையில், தமிழக அரசின் மானிய ஸ்கூட்டர் திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ராம் குமார் என்பவர் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை இருக்கும் இச்சமயத்தில் எதற்கு மானிய ஸ்கூட்டர் திட்டம் எனவும் அதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...