பாதுகாப்பு காரணங்களுக்காக தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கம் குறைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமாகியுள்ளதை அடுத்து தமிழகம் முழுவதுமே பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் கருணாநிதியின் வீடு, முக்கிய இடங்கள், கட்சி அலுவலகங்கள், காவேரி மருத்துவமனை என அனைத்து இடங்களிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கம் குறைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்னி பேருந்துகள்முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அரசுப்பேருந்துகள் குறைவாகவே இயக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே மக்கள் வெளியூர்களுக்கு இன்று செல்லாமல் இருப்பது நல்லது.
காவேரி மருத்துவமனை என அனைத்து இடங்களிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாவட்ட முக்கிய காவல் அதிகாரிகள் சென்னை வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பு காரணம் கருதி டாஸ்மாக் கடைகளை 6 மணிக்கே மூட தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.