நமதூர் அதிரை பிலால் நகர் பகுதியில் 3 மாதங்களுக்கு மேலாக குப்பைத் தொட்டியில் குப்பைகள் நிரம்பி அல்லப்படாமல் இருக்கிறது.
இந்த குப்பைகள் அனைத்தும் சாலையில் சிதறி துர்நாற்றம் வருகிறது.
இது குறித்து ஏரிபுறக்கரை ஊராட்சி நிர்வாகியான கலா அவர்களிடம் பேசியும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
இதனால் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
3 மாதங்களுக்கு மேலாக அள்ளப்படாமல் இருக்கும் இந்த குப்பைகளை விரைந்து அள்ளப்படுதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மக்கள் சுகாதாரத்தில் தொடர்ந்து அலட்சிய போக்கையே கடைபிடித்து வரும் ஏரிபுறக்கரை நிர்வாகம் மக்கள் கோரிக்கையை ஏற்குமா அல்லது அலட்சியப்போக்குடனே மீண்டும் அயர்ந்து தூங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.