அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் நடத்தும் 22-ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 22/04/2019 அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் ஒன்பதாம் நாள் ஆட்டமாக இன்று ஒரு ஆட்டம் நடைபெற்றது. இதில் அதிரை WCC அணியினரும் செருவாவிடுதி அணியினரும் மோதினர். முதலில் பேட் செய்த அதிரை WCC அணி 18.1ஓவர்களில் பத்து விக்கெட் இழப்பிற்க்கு 136 ரன்கள் குவித்தனர்.
பின்னர் 137 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய செருவாவிடுதி அணியினர் 18.3 ஒவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை அடைந்தனர்.
நாளைய தினம் அரையிறுதி ஆட இருக்கின்ற அணிகள் :
காலை 9 மணி – அதிரை RCCC VS செருவாவிடுதி
மதியம் 2 மணி – ELEVEN ஸ்டார் ராம்நாடு VS TRPCC காரைக்கால் அணி.