தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி இந்துக்களால் வெகு விமரிசையாக கொண்டாடபட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அதிரையில் இன்று விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தப்பட்டது.
இதில் அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிள்ளையார் (விநாயகர் சிலைகள்) ஒவ்வொன்றாக எடுத்து வரபட்டு அதிரையில் உள்ள வண்டிப்பேட்டையில் விநாயகர் சிலைகள் ஒன்றன்பின் ஒன்றாக மொத்தம் 39 விநாயகர் சிலைகள் சங்கமித்தது.
இதனைத் தொடர்ந்து இவ் ஊர்வலம் அதிரை வண்டிப்பேட்டையிலிருந்து முக்கிய சாலைகள் (சேர்மன்வாடி, பேரூந்து நிலையம், கிழக்கு கடற்கரைச் சாலை) வழியாக எடுத்துச் செல்லப்பட்டு கடற்கரையில் கரைக்கப்பட்டது.
பாதுகாப்பு பணிக்காக நாகை மாவட்டத்தில் இருந்து 100 காவலர்களும், தஞ்சை மாவட்டத்தில் இருந்து 500 காவலர்களும், திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 300 காவலர்களும் கலந்து கொண்டு விழாவிற்கு எந்த ஒரு அசம்பாவிதங்களும் ஏற்படாமல் சிறப்பாக நடத்தி முடித்தது குறிப்பிடத்தக்கது.