தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் பேரூராட்சியை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அல்லி மதுக்கூர் செல்லும் வழியில் உள்ள குப்பை கிடங்கில் தினசரியாக கொட்டிவந்தனர்.
இந்நிலையில், இன்று(06/02/2018) காலை பேரூராட்சி வாகனம் குப்பைகளை கொட்ட அந்த குப்பை கிடங்கு வாளாகத்திற்குள் சென்று குப்பைகளை கொட்டிவிட்டு வெளியேற வந்தபோது அப்பகுதி மக்கள் கதவை சாற்றிக்கொண்டு பேரூராட்சி வாகனத்தை சிறைபிடித்தனர்.
அதுமட்டுமின்றி, அந்த பொதுமக்கள் கூறுகையில், பல இடங்களில் இருந்து அல்லப்படும் குப்பைகளை இந்த இடத்தில் கொட்டுவதால் அதன் துர்நாற்றம் அதிகளவில் உள்ளதாகவும் , அப்பகுதில் தற்பொழுது கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றக்கோரியும்,இனி இங்கு குப்பைகளை கொட்ட வரக்கூடாது என்றும், வேறு இடத்தில் குப்பை கிடங்கை அமைத்துக்கொள்ள கோரியும் இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.