Thursday, April 18, 2024

அதிரை : திமுகவின் திருவாரூர் பிரச்சார கூட்டத்தில் அதிகளவில் தொண்டர்கள் பங்கேற்க முடிவு !

Share post:

Date:

- Advertisement -

நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் பம்பரமாய் சுழன்று வருகின்றனர்.

இதில் முதற்கட்டமாக திமுகவின் பிரச்சார கூட்டம் நாளை திருவாரூரில் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

முன்னதாக அதிராம்பட்டினம் பேரூர் நகர செயலாளர் இராம. குணசேகரன் அவர்கள் ஒருங்கிணைப்பில் அதிராம்பட்டினத்தில் உள்ள கூட்டணி கட்சி கிளை நிர்வாகிகளை சந்தித்து அழைப்பு விடுக்கப்பட்டது.

அந்த வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, இந்திய காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

இந்த நிகழ்வை அடுத்து தஞ்சையில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடும் நீலமேகம் மற்றும் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் SS. பழனிமாணிக்கம் ஆகியோரை ஆதரித்து கூட்டணி கட்சியின் தலைவர்கள் வாக்கு சேகரிக்கின்றனர்.

இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிரை நகர கூட்டணி கட்சி கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் வெகுவாக கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...