அதிரை சிட்னி ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிரிக்கெட் கிளப் நடத்திய 12ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி நேற்று(27/04/2019) தொடங்கி நடைபெற்று வந்தது.
இத்தொடரின் இறுதி ஆட்டம் இன்று மாலை அதிரை சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இதில் அதிரை சிட்னி அணியினரும் அதிரை ASC அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அதிரை சிட்னி அணி வெற்றி பெற்று முதல் பரிசான ரூ. 10,000 ஐ தட்டிச் சென்றது.
இறுதி ஆட்டத்தில் வெற்றியை நழுவவிட்ட அதிரை ASC அணிக்கு இரண்டாம் பரிசான ரூ. 7,000 மும், அடுத்தடுத்த இடங்களை பிடித்த சிட்னி பி அணிக்கும், சச்சின் பாய்ஸ் அணிக்கும் தலா ரூ. 4,000 வழங்கப்பட்டது.
போட்டிக்கு பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக எம்.பி.ஏ. புகாரி மற்றும் அதிரை எக்ஸ்பிரஸ் அஷ்ரப் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதை அதிரை ASC அணியின் வீரர் பிலால் வழங்கினார்.