Wednesday, May 8, 2024

அதிரை கடற்கரைத்தெருவில் நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாம் !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

நாட்டின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர், ஜமாத்தார்கள் மற்றும் முஹல்லாவாசிகள் இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம் இன்று சனிக்கிழமை கடற்கரைத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

சிறப்பாக நடைபெற்ற இம்முகாமில் 90க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் முதன்முறையாக ரத்ததானம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரத்ததானம் செய்த அனைவருக்கும் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து சென்ற கல்வி ஆண்டில் 10,11,12 ஆகிய வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் மார்க்க கல்வி முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாஅத்தினர், தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர், இளைஞர்கள் மற்றும் முஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...