Friday, March 29, 2024

அதிரை கடற்கரைத்தெருவில் வடிகால் வசதி இல்லாததால் தேங்கி நிற்கும் மழைநீர்…நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி ?

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் கடந்த மாதம் 15ஆம் தேதி நள்ளிரவில் கஜா புயல் வீசியது. புயலின்போது அதிரையில் 111 கீ.மி வேகத்தில் காற்று வீசியது. மேலும் பலத்த மழையும் பெய்தது. இதனால் மரங்கள், மின்கம்பிகள் சேதமடைந்தன. கூரை வீடுகளும் பலத்த சேதத்தை சந்தித்தன.

அப்போது பெய்த கனமழையின் காரணமாக அதிரை கடற்கரைத்தெருவில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. அப்போது அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தற்காலிக வடிகால் வெட்டப்பட்டு, மழைநீர் முழுவதும் ஓடுவதற்கு வழிவகை செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் பெய்த மழையால் அதே இடத்தில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் மழைநீரால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவவும் வாய்ப்புள்ளது.

எனவே அதிரை பேரூராட்சி நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி நோய் பரவுவதற்கு முன் அந்த மழைநீர் ஓடுவதற்கு நிரந்தர வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...