தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகேயுள்ள மிளாரிக்காட்டில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
மிளரிக்காடு பகுதியில் இன்று பகல் மின்கசிவு காரணத்தினால் மூன்று குடிசை வீடுகள் மளமளவென அடுத்தடுத்து எரிய துவங்கியது, இதில் குஞ்சம்மாள் என்பவரது வீடானது முழுவதுமாக எரிந்து சாம்பலானது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்தை அறிந்து பட்டுக்கோட்டை MLA C.V. சேகர் மற்றும் சுப்ரமணியம் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி முழுவதுமாக எரிந்து சாம்பலான குஞ்சம்மாள் அவர்களுக்கு ரூபாய் 5000 நிதி உதவி செய்தனர்.
தீ விபத்தில் சிக்கியவர்கள் கூறுவதாவது:-
வீட்டு வாசலில் அமைந்துள்ள மின் கம்பத்தினை மாற்று இடத்தில் அமைக்க பல முறை கூறியும் மாற்றத்தால் தான் இன்று எங்களுக்கு இச்சம்பவம் நேரிட்டுள்ளது என்று கண்ணீர் மல்க கூறினார்கள்.