அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம்,காட்டுபள்ளி தர்கா வளாகத்தில் புனித மீலாது விழா மற்றும் முஹிய்யத்தீனய்ய பெருவிழா நடைபெற்றது.
மேலத்தெரு ஷெய்கு நஸ்ருத்தீன் வலியுல்லா தர்கா வளாகத்தில் இன்று(31.1.2018) மாலை 6 மணியளவில் மீலாது விழா நடைபெற்றது. இஸ்லாமிய தமிழ் இலக்கிய தமிழ் கழகம்,துணைத்தலைவர் முஹம்மத் தாஹா தலைமையில் நடைபெற்றது.MMS.சேக் நஸ்ருத்தீன்,SSB.நஸ்ருத்தீன்,PMK.தாஜுதீன்,A.தாஜுதீன்,M.அப்துல் ஜலீல்,MM.இப்ராகிம்,SMA.அக்பர்,VT.தெஹ்லா மரைக்காயர், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வரவேற்புரை KK.ஹாஜா நிகழ்த்தினார்கள்.
மேலும் சிறப்புரையாக தீனிசைத் தென்றல் தேரிழுந்தூர் தாஜுதீன் மற்றும் சென்னை,பாலவாக்கம் தலைமை இமாம் முகமது அபூபக்கர் உஸ்மானி ஆகியோர் உரையாற்றினார்கள்.பதுருல் ஜமான் நன்றியுரை கூறி நிகழ்ச்சி முடிவடைந்தது.