Friday, April 19, 2024

அதிரையில் பேரூராட்சி, சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் இமாம் ஷாஃபி பள்ளி இணைந்து நடத்திய மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் பேரூராட்சி, அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 மற்றும் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை ஆகியவை இணைந்து நடத்திய ‘தூய்மை இந்தியா’ திடக்கழிவு மேலாண்மை கருத்தரங்கம் மற்றும் ‘ஜல்சக்தி அபியான்’ மழைநீர் விழிப்புணர்வு பேரணி நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேரணியில், மாணவர்கள் மூலம் வீடுகளுக்கு சென்று மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய வரைபடம் மற்றும் விதை பந்துகள் வழங்கப்பட்டன. மேலும் இன்று புதன்கிழமை மாணவர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை சாலை மற்றும் ஊரின் உள்பகுதியிலும் சுமார் 500 மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சிக்கு பள்ளி துணை தாளாளர் M.S. முகம்மது ஆஜம் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் A. மீனாகுமாரி முன்னிலை வகித்தார். பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் K. அன்பரசன் பேரணியை துவக்கி வைத்தார். சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் செயலாளர் M.F. முஹம்மது சலீம் வரவேற்புரை ஆற்றினார். பள்ளியின் நிர்வாக அலுவலர் K. அஷ்ரப் அலி நன்றியுரை வாசித்தார்.

இதில் சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் உறுப்பினர் ஷேக் தம்பி, துணை முதல்வர்கள் M. ஜப்பார், மற்றும் J. தபீதா, உடற்கல்வி ஆசிரியர், JRC, NGG, Scout ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...