தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சிஎம்பி லைனில் விநாயகர் சிலையை கொண்டு வந்து சலசலப்பை உருவாக்க இந்து முன்னணி அமைப்பினர் முயற்சி.
விநாநகர் ஊர்வலத்தில் உயர்நீதிமன்றம் பலவித கட்டுப்பாடுகளை வலியுறுத்தியுள்ளது.அப்படியிருக்கையில் அதிராம்பட்டினம் VKM ஸ்டோர் வழியாக இதுவரை இல்லாத வகையில் புதியதாக காவல்துறையின் அனுமதியின்றி 30க்கும் மேற்பட்டோர் ஊர்வலத்தை சர்ச்சையான கோஷங்களுடன் இந்து முன்னணி அமைப்பினர் சிலையை எடுத்து சென்றனர்.இதனால் அந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.
தகவலையறிந்து வந்த பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் பொதுமக்களுடன் சேர்ந்து கடுமையான எதிர்ப்புகளை எஸ்.ஐ இராஜேஷிடம் சொல்கையில் அவர் உரிய முறையில் பதிலளிக்காமல் பொதிமக்களையே மிரட்டும் வகையில் பேசினார்.இதனால் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து அதிரை காவல்நிலையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்டத் தலைவர் ஹாஜா தலைமையில் டிஎஸ்பி செங்கமலக்கண்ணனிடம் புகார் மனு அளித்தனர், அடுத்த முறை இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாது என்றும், இப்போது அளித்துள்ள புகார் மனுவிற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் அன்வர்,நளீம்,வழக்கறிஞர் நிஜாம் ஆகியோர் உடனிருந்தனர்.